நிற்பதா கடப்பதா



பசியோடு வந்த கொக்கிற்கு
குளத்தின் மையத்தில்
ஒரு கருவாடு மட்டும்
மின்னிக்கொண்டிருந்தது

தவித்துக் கொண்டிருந்த
கடைசி மரமும்
தன்னைத் தானே
துண்டித்துக் கொண்டது

வேறு வழியில்லை...
வெயிலை நோக்கி
ஏறித்தான் ஆகவேண்டும்.
போகும் வழியில்
கருத்த மேகம் ஒன்றிருக்கும்
நிற்பதா கடப்பதா
என்ற சந்தேகம் மட்டுமே

இப்போது!

2 comments:

Nagendra Bharathi said...

அருமை

ராஜி said...

யதார்த்தம்