கீச்சுகள் தொகுப்பு - 67

தொடரும் எதுவுமே ஒரு கட்டத்தில் தனக்குள் ஒரு போதையை அல்லது சலிப்பை ஏற்படுத்திக்கொள்கிறது.

-

அன்பு என்பது கிடப்பில் இருந்து அள்ளுவதல்ல, பால் போன்று சொட்டுச் சொட்டாய் சுரப்பது!

-
 
எல்லாவற்றிற்கும் பதில்கள் தேவையா!?

-
 
பாறைகளின்றி அருவி ஏது...! எனினும்... நீரில்லா அருவியில் பாறைகளை ரசிப்போர் யார்!?

-
 
வெறுப்பின் திரி முனைப் பசிக்கு நெருப்பையா பரிசளிக்கப் போகிறீர்கள்...!?

-

மீதி விரல்கள் வழக்கம்போல் நம்மையே சுட்டுவதை மறந்து, யாராவது செய்வார்கள், செய்யவேண்டும் எனும் விரல் சுட்டல் வழக்கம்போல் தொடர்கிறது!

-

உலகப் பேரதிசயங்களில் மகத்தானது "மனம்"

-
 
ஒரு இரவென்பது வெளிச்சமின்மையும், இருள் படர்தலும் மட்டுமல்ல அல்ல. இன்னொரு நாளை எதிர்கொள்ளத் தயார்படுத்துவதற்கான ஆசுவாசம்.




-

கேள்விக்கு தேவையான அளவிற்கும் கூடுதலாக பதில் தருகையில், அந்த காரணத்திற்காகவே புதிய கேள்விகள் வருகின்றன.

-
 
இதழின் வழி உயிரில் புகும் முத்த மது!

-

நேசிப்பு ஒரு மொழியாக...

-

சில தாமதங்கள் நல்லதுக்குத்தான்.

-
 
அலை கடலில் இரையெடுக்க தாழப்பறக்கும் பறவையின் சிறகுகளில் படியும் உப்புக்காற்றின் ஈரமாய் தாழிடப்பட்ட மௌனம்!

-

 
தன்னை நேசிக்கின்றவர்கள் ஒருபோதும் 'தன்னைக் குதூகலப்படுத்திக் கொள்ளும்' வாய்ப்பினைத் தவற விடுவதேயில்லை.

-

முற்றுப்புள்ளியில் முத்தம் பதிக்கிறாள் ஈரத்தில் புள்ளி கரைகிறது கடைசி வரி நீள்கிறது!

-
 
'இதெல்லாம் சமாளிக்கக் கூடியதுஎன்பது சமாளித்துவிட்ட பிறகே தெரிய வருகிறது!

-
 
பல நேரங்களில் அணிந்திருக்கும் கண்ணாடியும், அதில் பூசப்பட்டிருக்கும் வண்ணங்களும்தான் நம் பிரச்சனையே!

-
 
நதியின் நகர்வில் நிலவு குளிக்கின்றது நினைவுகள் நனைகின்றன! :)

-

ஊழலுக்கும் கருப்பு பணத்திற்கும் என்ன வித்தியாசம்? உடலுறவுக்கும் கர்ப்பத்துக்கும் இருக்கும் வித்தியாசம் தான்! ;)

-

 வாழ்தல் காலம் பேசும் வரலாறு


-

மற்றவர்களால் கெட்டுப்போனவர்களை விட, தன்னைத்தானே கெடுத்துக் கொண்டவர்கள்தான் உலகில் அதிகம்!

-

திசையெங்கும் தேடித்தேடி வணங்கும் இந்த தேவதையின் வேண்டுதல் என்னவாய் இருக்கும்!

-

மரம் பொழியும் இரவு நிழலை என் செய்ய?

-
 
வாழ்க்கை எனும் மொழி!

-
 
முள் நுனி கொண்டா அன்பை எழுதுவீர்!?

-

மேகத்தைத் துளைத்துவிட்டு நனைய மறுக்கலாமோ!?

-
 
புரிதல் என்பது 'உண்மையை, உண்மையாகவே உணர முற்படுதல்

-
 
இன்றைய மோகம் ஏங்கித்தவித்திருந்த இப்பெருமழையோடு!

-

வேர்களெங்கும் மகரந்தம்!

-
 
எவ்வளவுதான் புசிப்பதாம் எழுத்தை!

-

மகிழ்ந்திருக்கும் தருணங்களில் புகார்களுக்கும் குறைகளுக்கும், நெகிழ்ந்திருக்கும் தருணங்களில் வருத்தங்களுக்கும் வலிகளுக்கும் இடமேது.

-
கண்ணில் படும், காதில் விழும் எல்லாவற்றையும் மனதிற்குக் கொண்டு செல்வது மற்றும் சேமித்து வைப்பது கட்டாயமில்லை.

-

அன்பும் பிரியமும் தழுவும்போது, முன்பு போட்ட சண்டையின் உக்கிரத்தை நினைத்துப் பாருங்கள். உலகின் அதி அபத்தம் எதுவெனக் குழம்பித் தெளிவோம்!

-

நம் குழந்தைகளுக்கும் நமக்கும் இடையே இப்போது இருக்கும் நெருக்கத்தை, நாமும் நம் பெற்றோர்களும் அனுபவித்ததில்லை!

-
 

விரல்தொட்டு அழிப்பதன் மூலம் மட்டுமே சிலந்தி வலைகளின் உருவாக்கத்தை நிறுத்திவிட முடியாது

No comments: