நெற்றிக்கண்ணைச் சிமிட்டுபவள்





பெருநகரச் சாலைத்திருப்பத்தில்
எஞ்சியிருக்கும்
ஒற்றைப் புளியமரத்தினடியில்
தோல் சுருங்கிய
நொங்கு விற்கும் தாத்தா
காலைப் பொழுதொன்றில்
பதமாய் அடுக்குகிறார்
லாரியில் வந்திறங்கிய
நொங்குக் குலைகளை

இயற்கையெனவும்
சுவையெனவும்
சூடு தணிக்குமெனவும்
முகத்தில் பூசவெனவும்
குலையிலிருந்து தரித்து
சீவிக் கண் திறக்கிறார்

நொங்குகளும் பொழுதும்
தீர்ந்துபோகும் தருணத்தில்
அவரின் ஆயுளில் ஒரு நாள்
தீர்ந்து போயிருக்கின்றது

கருவைச் சுமந்தபடி
கண்ணீர் வழிய
கடப்பவளை நிறுத்தி
இளம் பச்சையும்
எண்ணைக்கருப்புமாய்
மிஞ்சிப்போன
நொங்கொன்றைச் சீவுகையில்
இட வலக் கண்ணோடு திறந்த
நெற்றிக்கண் மெல்லச் சிமிட்டுகிறது
அவருக்குள் புதைந்திருக்கும்
அவளைப் போலவே!


-

2 comments:

Geetha said...

Arumai....puthukai bloggers meet at 11.10.15 register pannitungala....www.velunatchiyar.blogspot.com .

'பரிவை' சே.குமார் said...

அருமை... ரொம்ப அழகு கவிதை.