கீச்சுகள் - 46



கடந்து போகும்... மறந்தும்கூட...! . அப்புறமென்ன...!?

-

1992 காலேஜ் படிச்சப்போ 2வது செமஸ்டர்ல அரியர் வெச்சஸ்டேட்ஸ்டிக்ஸ்பரிட்சைக்கு நேத்து ராத்திரி கனவில் படிச்ச கொடுமைய எங்கபோய்ச் சொல்லுவேன்!

-

இதுவும் ஒரு நாளாக இருக்கும்எனத் துவங்கும் நாளில் ஒரு சொல் ஒரு குரல் ஒரு சம்பவம் போதும்இது ஒரு நாள்என மாறிட!

-


வெயில் வெளுக்கும் இந்தப் பகலை இரவின் மடியில்தான் உலர்த்த வேண்டும்!

-

ஒரு கவிதை எழுதுவதைவிடச் சுகம் அவள் துவைக்கும் துணியை முறுக்கிப் பிழிந்து கொடியில் உலர்த்தச் செய்தல்! :)

-



அணையில் தளும்பும் நீரின் பெரும்பான்மைகூட சொட்டுச் சொட்டாகத்தானே சொட்டியிருக்க வேண்டும்

-

கரைந்தோயும் கதிரோன்
களிப்பூட்டும் கவிதை
தித்திக்கும் தேநீர்
திகட்டாமல் நீ.....
போதும்! போதும்!!

-

வெயிலுக்கேது வேலி. நீ காய்ச்சு மச்சி!

-

நிலநடுக்கமே என்றாலும் பாதிப்பை ஏற்படுத்தினால் மட்டுமே அதன்மேல் பயமும் மரியாதையும்!

-

ஏற்றுக்கொள்ள ஒரு காரணம் இருப்பதாக நீங்கள் சொல்வதைப்போலவே, மறுப்பதற்கு என்னிடம் ஒரு காரணம் இருக்கலாம் () காரணமே இல்லாமலும்கூட இருக்கலாம்

-

என்னிக்கு ட்ரைவிங் லைசன்ஸ், வோட்டர் ஐடியில் எங்க படத்தை எங்களை மாதிரியே போடுறீங்களோ, அதுக்குப்பிறகுதான் இந்த நாடு வல்லரசாகும்! #சாபம்

-

ஒரு வேட்பாளர் இரு தொகுதியில் நின்று வெற்றிபெற்று, ஒன்றில் பதவி விலகினால் வரும் மறுதேர்தல் செலவை அவர் செய்யவேண்டும்னு சொல்லனும்!

-

அழத்தைரியமற்ற யாரோ ஒருவர்தான் சொல்லியிருக்க முடியும் அழுகை கோழைத்தனமென.

-

ஞாயித்துக்கெழமையும் 'பிசி'யாக இருப்பது புத்திசாலித்தனமா, முட்டாள்த்தனமா!?

-

சனிக்கிழமைனா 3 மணிக்குத்தான் பசிக்குது, ஞாயித்துக்கிழமைன்னா 12 மணிக்கே பசி பின்னுது. இஅநீயா - பசி வயிற்றை சார்ந்ததல்ல.. சோற்றை சார்ந்தது!

-



மழலை அள்ளிக் கொஞ்சுகையில் புதுமணத் தம்பதியினர் கொஞ்சம் கூடுதலாய் வெட்கம் பூக்கிறார்கள்!

-

நினைத்த நொடியில் ஃபேஸ்புக்கை Logout செய்வதும் ஜென் நிலையே! :)

-

2009ல் தோண்டிய பாதாளச் சாக்கடையை 2011 தேர்தலுக்கு மூடினாங்க. 2011க்கு பிறகு தோண்டியதை 2014ல் மூடுறாங்க. 2016லும் மூடுவாங்க, ரோடு போடுவாங்க

-

கனவு மறந்து போறதுக்கெல்லாம் கவலைப்படக் கூடாது பாஸ். காசா பணமா!?

-

நம் பிறந்த நாளில் பிறந்தவர்களை எப்போதும் பிடிக்கிறது. இப்போது நம் குழந்தையின் பிறந்த நாளில் பிறந்தவர்களையும் கூடுதலாகப் பிடிக்கி்றது!

-

ஒரு கதை, கவிதையில் இருக்கும் ருசியை நம் மனநிலை, பசிக்கு ஏற்ப ருசித்தலுக்கும், அதைப் படைத்தவரின் மனம் வழியே, விழி வழியே, சொற்கள் வழியே உணர்ந்து ரசித்து ருசிப்பதற்கும் மிகுந்த வேறுபாடுகள் உண்டு. அதுவும் அந்தப் படைப்பாளி எவ்வித செருக்குமின்றி, அதைப் படைத்த நொடியில் தானிருந்த மனநிலையைச் சொல்லச்சொல்ல அதையும் எட்டிப் பார்த்தவாறே அனுபவித்தல் அதனினும் இனிது! :)

-

பந்திக்கு லேட்டா வர்றது தப்புதான் பாஸ்... நீங்க ரொம்ப நேரம் பரிமாறி களைச்சிருப்பீங்க. அதுக்காக சோறு போட்டவுடனே, மோர் பக்கெட் எடுத்துட்டு வந்து மோர் போடட்டுமானு வயித்துல அடிக்கிறதெல்லாம் நல்லாயில்லைங்க

-

இந்த வாழ்க்கையில் நமக்கே நமக்குனு கொஞ்சம் பொழுதேனும் வாழ்ந்து பார்த்துடனும்!

-

அப்போது பேனா! இப்போது பென் ட்ரைவ்! தொலைப்பதில் முன்னேறிவிட்டோம்!

-


சூழல்களிலிருந்து மீண்டுவிடமுடியும் எனும் நம்பிக்கையும், இந்தச் சூழலை இப்போதோ, இதற்கு முன்னரோ எவரேனும் கடந்திருக்க முடியும் என்கிற நினைப்பும் மட்டுமே அவசியமாயிருக்கிறது.


பறந்து ஓயும் இறக்கையின் சிறகுகளுக்கு சொடுக்கெடுப்பது யார்!

-

கத்துக்குட்டி ஒன்னு ட்விட்டர்னா என்ன? எப்படி யூஸ் பண்றது? ஃபாலோயர்னா என்ன?னு கேக்குது. அவ்ளோதான் இனி கட்டை விரலும் கண்ணும் தேய்ஞ்சுடும்

-

கவிரயங்மொன்றில் உறங்குபவனின் கனவில் அரங்கேறுகிறது கவிதையொன்று! #தட்_செத்தாண்டா_சேகரு_மொமண்ட்

-

நேசிக்கவே இந்த வாழ்வு :)

-

சங்கீதா தியேட்டர் முக்குல ஸ்கூட்டியில ட்ரிப்பிள்ஸ்ல வந்து மினி பஸ்சப் பார்த்துப் பெப்பரக்கானு பயந்து, மத்தியான சோத்துக்கு பசியோட போனவன் மேல உரசி உயிர் பயத்தைக் காட்டிய மூனு மகராசிகளுக்குஸ்பெஷல் மகளிர் தின வாழ்த்துகள்’ :)

-


அட பக்கிகளா உங்களுக்கு பாட்டு புடிச்சா நீங்க கேளுங்க. செல்போன் ஸ்பீர்க்கல போட்டு பக்கத்தில இருக்கிறவன் காதுல ஏன் ஈயத்த காய்ச்சி ஊத்துறீங்க!

-

துக்கத்தில் பெரும்துக்கம் தந்தை மரணம் குறித்து மகளிடம் துக்கம் விசாரித்தலே! :(

-

அதெப்படிங்க எசமான்.... கூட்டணிக்குள்ளே இருக்கிற வரை சீட்டுக்கு கெஞ்சுறீங்க. வெளியே(த்திய) வந்தவுடன்விடுதலை விடுதலைனு கூவுறீங்க!

-

நெல்லுக்குப் பாயுறது புல்லுக்குப் பாயுறமாதிரி வீட்ல மிஞ்சுற குழந்தைங்க பூஸ்ட், ஹார்லிக்ஸ் வயித்துக்கு பாஞ்சிடுது #சீக்கிரம் வளர்ந்துடனும்

-

பிரியத்தை மொழியாக்கும் உறவுகளின் சொற்கள் மெல்லத் தலைகோதும், விரல்பிடித்து சொடுக்கெடுக்கும், கால்களை மடிமீது போட்டு அமுத்திவிடு எனக்கேட்கும்

-

பகை முடித்தல் பேரானந்தம்!

-

ஏற வேண்டிய ரயில் சரியான நேரத்திற்கு வருவதும், இறங்க வேண்டிய ரயில் தாமதமாகப் போவதும் விதிப்பயனென்க!

-

நம் இல்லாமையையும், தேவையையும் யாரோ உணர்த்துகையில், நெகிழும் உயிரின் காம்புகளில் பீறிடுகிறது அன்பு!

-

அது நமக்கு தேவையான ஒரு சாதாரணப் பொருள்தான். எப்போதாச்சும் வாங்கிக்கலாமென கண்டுகொள்ளாமல் விட்ட பொருளாகவும் கூட இருக்கலாம். அதை வாங்குவதற்குப் பயன்படுவதும் நம்ம காசுதான்.

ஆனால் அதை நாமே வாங்குவதற்கும், நம்மிடம் எதற்கோ எனச் சொல்லி காசு பெற்று ரகசியமாக வாங்கிவந்து மகள் பரிசாக அளிப்பதற்கும் கோடி வேறுபாடுகளுண்டு. அந்தக் கணத்தில் உணர்வோம் மகளும் ஒரு தாய்தான் என்பதை! :)

-

பல வருட தொப்பையைக் கரைக்க முயல்வது, பலூன் வாயை ஊசி கொண்டு தைக்கிறது மாதிரி!

-

எல்லா மீன்களும் பிடிபடுவதில்லை



-

5 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

வலைச்சர தள இணைப்பு : எனது தேடலும்.... பதிவர் அறிமுகமும் !!

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அழகியல் உணர்வுகளின் ஊர்வலம் ...

Unknown said...

அனைத்தும் சிதறிய முத்துக்கள்.செம

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்