கீச்சுகள் - 27


யார்யாரோ ஊட்டும் அவநம்பிக்கைகளை விட, யாரோ ஊட்டும் நம்பிக்கையில்தான் நகர்கின்றன நாட்கள்!

-



மரணம் பொதுவானது

-

உலகத்திலேயே வெளியான முக்கால் மணி நேரத்துலவெற்றி நடைபோடுவது தமிழ் சினிமா ஒன்றாகத்தான் இருக்கமுடியும்
#இந்த வெற்றிநடை ரவுசு தாங்க முடியல

-

அதுவேற’! இதுவேற’! #உலகத்தின் மிகஅரியதத்துவம்!

-



நிரம்பியிருக்கும் பணப்பைகளை விட, காலியாக இருக்கும் பணப்பைகளே 'சுமையானது

-

வாராத மழை வருமா!?. குளிக்காத என் பைக் இன்றாவது குளிக்குமா!?
#ய்ய்ய்யேக்கம்!

-

ஒருவரையே Blog Follow பண்ணி, Google+ Add பண்ணி, Twitter Follow பண்ணி கடைசியா Facebook Friend ஆக்கும்போது புரிகிறது உலகம் உருண்டையேதானு!

-

தக்கிமுக்கி IRCTC வேலை செஞ்சா பேங்க்காரன் பணம் தரமாட்டேங்கிறான். பேங்க பணம் தர்றேனு சொன்னா IRCTC தொங்குது.
#பேங்ல வேற காசு இருக்கனுமாமே!

-

பெரும்ப*லான சமரசங்கள், அதில் கிடைக்கும் லாபத்தை கவனத்தில்கொண்டே அமைகின்றன.
# * குறில் அல்லது பா நெடில் :)

-

என்கிட்ட  நல்லா நோட் பண்ணுங்க...  என்கிட்ட.... ஒருத்தர் போன்ல பேசிட்டே, அங்கே "நான் important call இருக்கேன், disturb பண்ணாதீங்கனு யார்கிட்டையோ சொன்னப்பத்தான் புரிஞ்சுது, ஊர்ல அடிக்கடி பலபேரு சொல்ற important callக்கு உண்மையான அர்த்தம் என்னானு! :))))



-

கரண்ட் கட் ஆனா (பதிலும்கூட வராதுனு தெரியாம) EB ஆபிஸ்க்கு போன் போட்டு, “கரண்ட் எப்ப சார் வரும்னு கேட்கும் அப்புராணிகள் நிறைந்த உலகம் இது

-

அழுக்கும் ஒரு நிறம் தான்!

-

Good Morning. Have a "Good Day"னு சொல்றதுக்குப் பதிலா Good Morning. Have a "Milk Bikis" Day-னு மாத்தி சொல்றது தப்பா! தப்பா!! தப்பா!!!?

-

எதிர்பார்த்த அளவு எது நமக்கு கிடைக்கலையோ அதுபத்தியே தான் சிந்தனை, பேச்சு இருக்கும் #காதல் - முத்தம் - குடி - பணம் - பதவி - இன்ன பிற! :)


ஹேப்பி நியூ இயர், ஹேப்பி கவ் பொங்கல், ஹேப்பி டமில் நியூ இயர், அப்புறம்... ஹேப்பி விநாயகர் பர்த் டே-னு கூட சொன்னீங்க...  சரி பரவாயில்ல... இப்ப ஹேப்பிபந்த்டே சொல்றீங்களே...  # உலகத்துல நீங்கெல்லாம் அம்புட்டு ஹேப்பியாவாடா இருக்கீங்க!

-

ஆழ்ந்த உறக்கம் ஒரு வரம்.


-

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து மட்டும் SMS சொல்லுங்க, கொஞ்சம் கொழுக்கட்டை, சுண்டல் கொடுத்தா கொறஞ்சா போய்ருவீங்க! # வரும் ஆனா வராஆஆதுடா!

-

அள்ளிக் கொடுத்தாலும், கிள்ளிக் கொடுத்தாலும்அன்பு = அன்பு

-



இறுதியாகக் கணக்கிட்டுப் பார்த்தால், வாழ்க்கையில் இழந்ததும், ஈட்டியிருப்பதும்வெறும்மனிதர்கள் மட்டுமே!

-

திருவள்ளுவர் ஏன் 1330 குறள்களோடு மட்டும் நிறுத்திவிட்டார்? # எதிர்காலத்தில் மனப்பாடம் செய்ய வேண்டிய பிள்ளைகள் பாவம் எனக்கருதி இருக்குமோ?


-

ஒரு கை பிடி திராட்சையை ஒன்றாய் தின்றாலும், ஒவ்வொன்றாய் தின்றாலும் அளவு ஒன்றுதான், ஆனால் சுவை வேறுவேறு

-

இலவசமாக ஒருநாள் கிடைக்கும் மரணத்தை, ஏன் சிலர் அவசர அவசரமாக விலை கொடுத்து வாங்குகிறார்கள்!

-


கடலை மிட்டாய்க்குள் இத்தனை சுவையை, ஒளித்து வைத்த(இறை)வன் ரசனை மிகுந்தவனாகத்தான் இருப்பான்

-

ஒரு கையில் புகை வழியும் சிகரெட், மறுகையில் ஆவி பறக்கும் தேநீர். அழைக்கும் அலைபேசியை ஆட்கொள்ள மூன்றாம் கை இன்றி தவிக்கிறான் தேநீர்க்கடையில்!

-

மத்திய அரசு செய்யும் காரியங்கள் குறித்து உங்களுக்கு சரிவர புரியவில்லையெனினும் கவலைப்படாதீர்கள், அது சர்வ நிச்சயம், உங்களுக்கு எதிரானதேதான்!

-

3 comments:

VANGAPESALAM said...

திருவள்ளுவருக்கு 7ம் நம்பர் ராசியாக இருக்குமோ

சமுத்ரா said...

அருமை...நல்ல வலைத்தளம்...நன்றி

கிருத்திகாதரன் said...

Arumai.....sema...